100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன

திருச்சியில் 100 ஆடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மீட்பு பணியில் குறுக்கிட்ட மழை
மீட்பு பணியில் குறுக்கிட்ட மழை
Published on

திருச்சி:

திருச்சியின் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 70 அடி ஆழத்துக்குச் சென்ற குழந்தை சுர்ஜித், தற்போது 100 அடிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே, குழந்தை  ஆழ்துளை கிணற்றில் சிக்கி 28 மணி நேரம் கடந்துவிட்டது. தற்போது 3 மீட்டர் தொலைவில்  1 மீட்டர் அகலத்திற்கு 90  அடிக்கு  மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், மீட்புப்பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும்,100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தின் கை தெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குழந்தை சுர்ஜித் மேற்கொண்டு கீழே சென்றுவிடாத பிடி, குழந்தையின் கை ஏர் லாக் மூலம் இறுக்கமாக பிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com