திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை: சுப்ரீம்கோர்ட்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை: சுப்ரீம்கோர்ட்
Published on

புதுடெல்லி:

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன் தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் பொழுது கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய கீதம் தொடர்பான உத்தரவை மறு பரிசீலனை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும், ‘‘தேசிய கீதம் இசைக்கப்படும்போது மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒருவர் எழுந்து நிற்கவில்லை என்றால் அவருக்கு தேசபக்தி குறைவு என்று அர்த்தம் இல்லை.

தேசிய கீதம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் ஜனவரி 9-ம் தேதிக்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மக்களை தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு (ஜனவரி 9) ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியிட்ட உத்தரவை திருத்தி வெளியிட மறுப்பு தெரிவித்து விட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com