சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா வழக்கு விசாரணை முடிந்தது - தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #AlokVerma #CBIDirector #SupremeCourt
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா வழக்கு விசாரணை முடிந்தது - தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
Published on

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக தலையிட்டது. அவர்கள் 2 பேரது அதிகாரத்தையும் பறித்து விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக எம். நாகேஸ்வரராவை நியமித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. அலோக் வர்மாவுக்காக மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசுக்காக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com