சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதல்: 10 பேர் படுகாயம்

சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதலில் 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்குவார்சத்திரம் அருகே பஸ்-லாரி மோதல்: 10 பேர் படுகாயம்
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் கனரக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஏற்றி கொண்டு கம்பெனி பஸ் சுங்குவார்சத்திரம் நோக்கி வந்து கொண்டு இருந்தது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது சுங்குவார் சத்திரம் கூட்டு சாலையில் சென்னை நோக்கி வந்த லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com