

இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை தடுத்த இந்தியா, 25-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. இந்தியாவின் முன்னணி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் இந்த கோலை அடித்தார்.
அதன்பின் ஆக்ரோஷமாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் 30, 34 மற்றும் 51-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஒரு கோலிற்குப் பிறகு இந்திய வீரர்களால் மேலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா 3-1 என வெற்றி பெற்றது.
கோல் அடித்த சந்தோசத்தில் இந்திய வீரர்கள்