ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Afganistan #SuicideAttack
ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி
Published on

காபூல்:

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தினம் தினம் பாதுகாப்பு படையினர் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள முகமந்த் தாரா என்ற மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியான பிலால் பாட்சா என்பவர் அட்டூழியம் செய்வதாகவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த போராட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 57 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Afganistan #SuicideAttack

X

Maalai Malar
www.maalaimalar.com