கரும்பு தோட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே கரும்பு தோட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரும்பு தோட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது
Published on

குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பாலூரைச் சேர்ந்தவர் அஜித் (வயது 21). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பொட்டவெளிகாலனி பகுதிக்கு சென்றார். அங்கு 10 வயது சிறுமி ஒருவர் தெருவில் விளையாடி கொண்டிருந்தார்.

அஜித், அந்த சிறுமியிடம் பேசி அருகே உள்ள கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

இதனால் அந்த சிறுமி அலறினாள். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த அஜித் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினாள். அவர் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com