பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி

பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு பிரபல சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்தியுள்ளார். #sudarsanpattnaik
பிரபல அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவிற்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி
Published on

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஓவியத்தை பூரி கடற்கரையில் வரைந்துள்ளார். ஹாக்கிங் கடந்த புதன்கிழமை காலை மரணமடைந்தார். நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவரின் விடாமுயற்சியின் மூலம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். இயற்பியலில் அவர் செய்த ஆராய்ச்சி அவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது. அவரின் மறைவிற்கு தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com