சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

குமரி மாவட்டம் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்
Published on

நாகர்கோவில்:

பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதாவது குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முதலில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் கைதான பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசாரை அச்சுறுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை பயங்கரவாதிகள் கொன்றதும் தெரியவந்தது.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். அதோடு கொலை செய்த போது பயங்கரவாதிகள் அணிந்திருந்த ஆடைகளும் சிக்கின. இதற்காக கேரளாவுக்கு 2 பயங்கரவாதிகளும் அழைத்து செல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து 10 நாட்கள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 31-ந் தேதி 2 பேரையும் மீண்டும் நாகர்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கைதான பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொலை குறித்து என்.ஐ.ஏ. சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் பயங்கரவாதிகள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com