

திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி முதலாமாண்டு காஸ்ட்யூம் டிசைன் அண்டு பேஷன் படிக்கும் மாணவர் சஞ்சய்குமார், அப்பேரல் பேஷன் டிசைன் மாணவர் வசந்த் குமார் ஆகிய 2 பேரும் இணைந்து கல்லூரி சுவற்றில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் வண்ண ஓவியங்கள் தீட்டி அசத்தியுள்ளனர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, நடிகர் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் சங்கர் உட்பட இந்திய அளவிலும், வால்ட் டிஸ்னி, மைக்கேல் ஜாக்சன் என சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற 51 பேரின் உருவங்களை பளிச்சிடும் வண்ணக்கலவைகளை கொண்டு கார்ட்டூன் ஓவியமாக தீட்டி உள்ளனர்.