

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ஜனவரி 26-ம் தேதி நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது. அதற்கு உண்மையில் காரணமான எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில்” என தெரிவித்துள்ளார்.