நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது

நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர். #Stormwarning
நாகை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது
Published on

நாகப்பட்டினம்:

வங்கக்கடலில் இன்று (14-ந்தேதி) புதிய புயல் உருவாகி உள்ளது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும், எனவே 15, 16 ஆகிய நாட்களில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் இந்த புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாகவும், அப்போது 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையொட்டி நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழ்கடல் சென்று மீன் பிடித்த நாகை மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் புதிய புயல் என்ன சேதத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி நாகை மாவட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Stormwarning

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com