பான்கிராப்ட்டின் செயலால் எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - சுமித்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் போன்ற நடவடிக்கையால் எனது நேர்மை குறித்து கேள்வி எழும்புகிறது என்று ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். #SAvAUS #Bancroft #Smith
பான்கிராப்ட்டின் செயலால் எனது நேர்மை குறித்து கேள்வி எழுகிறது - சுமித்
Published on

தென்ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கூறுகையில், ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில் ‘உணவு இடைவேளையின் போது வீரர்களிடம் இது பற்றி ஆலோசித்தேன். பான்கிராப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. இதற்காக வருந்துகிறேன். இதன் மூலம் கேப்டனாகிய எனது நேர்மை குறித்தும், அணியின் நேர்மை குறித்தும் கேள்விகள் எழுகிறது. வருங்காலத்தில் இது போன்று மீண்டும் நடக்கக்கூடாது’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com