டோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு

டோனி மிகச்சிறந்த புத்திசாலிகளில் ஒருவர் என்றும், அவரை விட ஸ்மித் கூடுதல் புத்திசாலி என்றும் புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கே பாராட்டியுள்ளார்.
டோனி மிகச்சிறந்த புத்திசாலி; ஸ்மித் அவரை விட மேல்- புனே அணி உரிமையாளர் பாராட்டு
Published on

கடந்த வரும் டோனி தலைமையிலான புனே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இந்த வருடம் டோனியை நீக்கிவிட்டு ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித்தை புனே அணி கேப்டனாக்கியது.

முதலில் மந்தமாக விளையாடிய அந்த அணி பின்னர் சிறப்பாக விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தது. குவாலிபையர் 1-ல் வெற்றி பெற்று முதல் அணியாக புனே இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது. நாளை மும்பையை எதிர்கொள்கிறது.

புனே அணி வெற்றிபெறும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளரின் சகோதரர் டோனி குறித்து விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் டோனி மிகச்சிறந்த புத்திசாலி என்றும், ஸ்மித் அவரை விட கூடுதல் புத்திசாலி என்றும் புனே அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘டோனியுடன் பேசிய வகையில், அவர் ஒரு தலைசிறந்த புத்திசாலிகளில் ஒருவர். உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். ஆனால் டோனியை விட ஸ்மித் கூடுதல் புத்திசாலி. நான் ஸ்மித்திடம் சுருக்கமாக, சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கூறினேன். அவருடைய திட்டம், யுக்திகள், மன உறுதி, முக்கியமான கட்டத்தில் அவர் எடுக்கும் முடிவுகள், அணியை ஒருங்கிணைத்து கொண்டு செல்லுதல் போன்றவற்றில் அவரின் செயல்பாடுகளை நம்புவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் 8 முதல் 9 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். நான் தாஹிர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்மித்திடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நாம் 7 போட்டிகளில் வெற்றிபெறுவோம் என்றார். சிறப்பு வாய்ந்த டோனி அணிக்கு ஏதாவது செய்வார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com