பாகிஸ்தானில் சீக்கிய பேரரசின் முதலாம் மன்னரின் சிலை உடைத்து நாசம்

பஞ்சாப்பை ஆண்ட சீக்கிய இனத்தவர்களின் முதலாம் மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிலையை சில விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.
சேதப்படுத்தப்பட சிலை
சேதப்படுத்தப்பட சிலை
Published on

பஞ்சாப்பை ஆண்ட சீக்கிய இனத்தவர்களின் முதலாம் மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிலையை சில விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இந்திய துணைகண்டத்தின் வடமேற்கு பகுதியில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் முதன்முதலாக சீக்கிய பேரரசை நிறுவியவர் மகாராஜா ரஞ்சித் சிங். சீக்கிய மதத்தவர்களின் பெருந்தலைவராகவும் ஆன்மிக குருவாகவும் அறியப்பட்ட ரஞ்சித் சிங், சுமார் 40 ஆண்டுகள் அப்பகுதியை ஆட்சி செய்து 1839-ம் ஆண்டு
மரணம் அடைந்தார்.

அவரது நினைவாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சில இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் உள்ள கோட்டையில் மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு 9 அடி உயரத்திலான வெண்கல சிலை அமைக்கப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com