என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன: ஐகோர்ட் உத்தரவை அடுத்து நடவடிக்கை
- புதிதாக டெண்டர் கோரி பார்களை ஏலத்தில் விட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
- சென்னையில் பார்கள் மூடிக் கிடப்பதால் தெருவோரங்களில் நின்று மது குடிப்பது தொடர்கதையாகி வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பார்கள் செயல்படும் கட்டிட உரிமையாளர்களின் தடையில்லா சான்று தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு எதிராக பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் பார் ஏலத்தில் பங்கேற்க உரிமையாளர்களின் தடையில்லா சான்று தேவை இல்லை என்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் டாஸ்மாக் பார் ஏலம் தொடர்பான வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு 2022-ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் புதிய டெண்டர் தொடர்பான ஏல அறிவிப்பை வெளியிடும்போது கட்டிட உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு பிறப்பித்த உத்தரவில் 2022-ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். புதிதாக டெண்டர் கோரி பார்களை ஏலத்தில் விட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக சென்னையில் கடந்த ஓராண்டாக மூடிக்கிடக்கும் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு வழி ஏற்படும் சூழல் பிறந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகளும் பார் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பார்கள் மூடிக் கிடப்பதால் தெருவோரங்களில் நின்று மது குடிப்பது தொடர்கதையாகி வருகிறது. குடியிருப்புகள் மத்தியிலும் மதுபிரியர்கள் குடித்து வருகிறார்கள். பார்களுக்கு மீண்டும் ஏலம் விட பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் சென்னையில் விரைவில் பார்கள் திறக்கப்பட்டு செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் ஓராண்டாக தொடரும் "சாலையோர குடி"க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்