ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - வாலிபர் கைது

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - வாலிபர் கைது
Published on

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஷேக்முகைதீன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com