காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் புதிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என முதலமைச்சருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #Stalin #CauveryIssue
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
Published on

சென்னை:

காவிரி விவகார ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் புதிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என முதலமைச்சருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது; கர்நாடக அரசின் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #Stalin #CauveryIssue

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com