ஜம்மு காஷ்மீர்- டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவலர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். #MilitantsAttack
ஜம்மு காஷ்மீர்- டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவலர் உயிரிழப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள மிடுரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் முகாம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் அந்த முகாம் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த விஜயகுமார் என்ற  காவலர் படுகாயம் அடைந்தார்.

சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து டிரால் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #MilitantsAttack

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com