ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கிராமங்களில் உள்ள வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக்கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடம், திருவேங்கடபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாதர்சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com