இலங்கை அணிக்கு 311 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே

இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 310 ரன்களை ஜிம்பாப்வே அணி இலக்காக நிர்ணயித்து உள்ளது.
இலங்கை அணிக்கு 311 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே
Published on

கொழும்பு:

இலங்கை சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாசில் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சாலமன் மிர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் மஷகாட்சா 98 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார். அவரை தவிர முசகண்டா 48 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 43 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 311 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே அணி நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com