பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ். பிரனோயை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
Published on

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோயும், கிடாம்பி ஸ்ரீகாந்த்-தும் விளையாடினர். இப்போட்டியிம் முதல் சுற்றை பிரனோய் 21-14 என கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரிப்புடன் விளையாடிய ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றை 21-19 என கைப்பற்றினார்.

இதனால் ஆட்டம் சமனானது. மூன்றாவது சுற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த சுற்றையும் ஸ்ரீகாந்த் 21-18 என கைப்பற்றினார். இதன்மூலம் 14-21, 21-19, 21-18 என்ற செட்களில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இந்த ஆண்டு ஸ்ரீகாந்த் விளையாட இருக்கும் மூன்றாவது சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியாகும். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் ஜப்பானின் கெண்டா நிஷிமோட்டாவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com