இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple
இலங்கை அதிபர் சிறிசேனா நாளை திருப்பதி வருகை
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலங்கை அதிபர் சிறிசேனா 17-ந் தேதி சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக, தன் மனைவி ஜெயந்தி புஷ்பகுமரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர் விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு செல்கிறார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். 17-ந் தேதி அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாத பூஜையில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர், சிறிசேனா பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

இலங்கை அதிபர் ஆன பிறகு அவர் திருப்பதி கோவிலுக்கு வருவது, இது 3-வது தடவை ஆகும்.   #SriLanka #MaithripalaSirisena #TirumalaTemple 

X

Maalai Malar
www.maalaimalar.com