இலங்கையில் பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகள் வழக்கு

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. #SriLanka #SriLankaParliament
இலங்கையில் பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து பிரதான அரசியல் கட்சிகள் வழக்கு
Published on

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. பாராளுமன்றத்தில் இந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com