விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கை வர அனுமதி - பரிசீலிக்க குழு அமைத்து ரணில் விக்கிரமசிங்கே உத்தரவு

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதற்கான பரிசீலனைக்கான குழுவை அமைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கை வர அனுமதி - பரிசீலிக்க குழு அமைத்து ரணில் விக்கிரமசிங்கே உத்தரவு
Published on

கொலும்பு:

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பரிசீலனை செய்ய இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com