எஸ்.புதூர் பகுதியில் மது விற்றவர் கைது

எஸ்.புதூர் பகுதியில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

எஸ்.புதூர்:

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எஸ்.புதூர் அரசு டாஸ்மாக் கடை அருகில் உள்ள புளியமரம் தோப்பில் கட்டுகுடிபட்டி கிராமத்தை சேர்ந்த அழகு மகன் மாமுனி (வயது 35) மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 13 மதுபாட்டில்களுடன் மாமுனியை கைது செய்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com