

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நாராயண் சேவா சன்ஸ்தன் என்ற சமூக சேவை நிறுவனம் சார்பாக பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்த பேஷன் ஷோ கால் ஊனமுற்றவர்களுக்காக பிரேத்யகமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் காலிபர்ஸ், சக்கரநாற்காலி, செயற்கை கால்கள் மற்றும் ஊன்றுக்கோலுடன் நடந்து வந்து பார்வையாளர்களை அசத்தினர். இந்த விழாவில் பிரபல நடிகை சுதா சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.