

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் கடந்த 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பகவத் அனுக்ஞை, ஆசார்யவர்ணம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி, பவித்ர பிரதிஷ்டை, வேத திவ்ய பிரபந்தபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பெருமாள்-தாயார் மண்டபம் எழுந்தருளுதல், அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், பெருமாளுக்கு பவித்ர மாலை சமர்ப்பித்தல், பூர்ணாஹூதி சாற்றுமுறையும் மாலை 6 மணிக்கு யாகசாலை பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து நாளை மறுநாள்(சனிக்கிழமை) வரை திருபவித்ரோத்ஸவம் மற்றும் யாக சாலை ஹோமம் நடைபெறுகிறது.