பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவு

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை காவல்துறை உருவாக்கியுள்ளது. #CrimesAgainstWomen #TNPolice
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறையில் சிறப்பு பிரிவு
Published on

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தள பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com