ஜெர்மனி: ஆட்சியமைப்பது தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கல் உடன் பேச எதிர்க்கட்சி சம்மதம்

ஜெர்மனியில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியுடன் கூட்டணி அமைக்க முக்கிய எதிர்க்கட்சியான எஸ்.பி.டி சம்மதம் தெரிவித்துள்ளது.
Published on

பெர்லின்:

வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் வேந்தராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு.

இந்த நிலையில் அந்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் பழமைவாத கட்சி (சி.டி.யூ.) மற்றும் ஹோர்ஸ்ட் சீஹோபரின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (சி.எஸ்.யூ.) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

மெர்க்கலுக்கு அதிக ஆதரவு இருந்தாலும், 246 இடங்களையே அந்த கூட்டணி கைப்பற்றியது. மேலும், கடந்த முறை அந்த கூட்டணி பெற்ற ஓட்டுகள் 41.5 சதவீதத்தில் இருந்து 32.9 சதவீதமாக சரிந்தது.

அதே நேரம், அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழமைவாத கூட்டணியில் இருந்து தேர்தலுக்கு முன்பே விலகிய எஸ்.பி.டி. கட்சி 153 இடங்களை கைப்பற்றியது. ஏ.எப்.டி. 94 இடங்களிலும், எப்.டி.எப். 80, டி லிங்கே, 69, கிரீன் கட்சி 67 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. இதனால், புதிய அரசு அமைக்க முடியாமல் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

தேவைப்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயார் என வேந்தர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், சி.எஸ்.யூ உடன் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று எஸ்.பி.டி கட்சி அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை என அந்த கட்சியின் தலைவர் மார்ட்டின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com