

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் லக்னோ நகரில் இன்று நடைபெற்று வருகிறது. அம்மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாராளுமன்ற தேர்தலில் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. #SPNationalExecutivemeeting #LSpolls #LSpollsthroughballotpaper