தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 154 ரன்னில் சுருண்டது

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. #SAvSL
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை 154 ரன்னில் சுருண்டது
Published on

தொடக்க வீரர் மார்க்கிராம் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் டி காக் 86 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் பெர்னாண்டோ, ரஜிதா தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. திரிமானே 25 ரன்னுடனும், ரஜிதா ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரஜிதா 1 ரன் எடுத்த நிலையிலும், திரிமானே 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா தாக்குப்பிடித்து 42 ரன்கள் அடிக்க இலங்கை அணி 37.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 154 ரன்னில் சுருண்டது. ரபாடா 4 விக்கெட்டும், ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com