

2015 உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து, அதன்பின் அணியை மீண்டும் கட்டமைத்து நான்கு ஆண்டுகளில் வலுவான அணியாக திகழ்கிறது. இந்த விஷயத்தில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஜாம்பவான் கல்லிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லிஸ் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணியிடம் இருந்து உத்வேகத்தை தென்ஆப்பிரிக்கா அணி எடுத்துக் கொள்வது அவசியம். அடுத்த உலகக்கோப்பைக்காக அணியை திரும்ப கட்டமைக்க வேண்டும். நான்கு வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து தரவரிசையில் மிகவும் மோசமான இருந்தது.