அரியலூர்: மொய்ப்பணத்தை கொடுக்க மறுத்த தந்தையை அடித்துக்கொன்ற மகன்

திருமண மொய்ப்பணம் தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: மொய்ப்பணத்தை கொடுக்க மறுத்த தந்தையை அடித்துக்கொன்ற மகன்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50), தொழிலாளி. இவரது மகன் இளமதி (23). நேற்று முன்தினம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை சண்முகம் வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று இளமதி, தந்தையிடம் மொய் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், திருமணத்திற்கு அதிக செலவு ஆகி விட்டது. எனவே அந்த பணத்தை வைத்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இளமதி தன்னிடம் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் தந்தை -மகன் இடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த இளமதி, உருட்டுக்கட்டையால் சண்முகத்தை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரி ழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் உடையார் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com