ஆலங்குடி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்த தந்தை

ஆலங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மகன் இறந்தால் அதிர்ச்சி அடைந்த தந்தை மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாரடைப்பு
மாரடைப்பு
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது73). கூலி விவசாயி. இவரது மகன் ராஜாங்கம் (47). ராஜாங்கத்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இவர் வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ராஜாங்கத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதையடுத்து அவரது உடல் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மகன் இறந்த செய்தியை கேட்ட தந்தை ஆறுமுகம் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகனும் தந்தையும் இறந்தது கிராமத்தினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com