காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுத்து நிறுத்தம் - ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போராட்டத்தில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.#MilitantsInfiltrate
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுத்து நிறுத்தம் - ராணுவ வீரர் வீரமரணம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் தங்டார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலின் போது ராணுவ வீரர் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஊடுருவலை தடுத்து நிறுத்திய போரில் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com