

ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மெண்டார் செக்டாரில் ராணுவ வீரர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலாகோட்டில் உள்ள தர்கண்டி கிராமத்தில் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடி திடீரென வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #JammuKashmir #LandmineBlast