சோலார் பேனல் ஊழல் வழக்கில் இருந்து உம்மன் சாண்டி விடுவிப்பு

கேரள மாநிலத்தை கலக்கிய பிரபல சோலார் பேனல் ஊழல் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியை கோர்ட் விடுவித்துள்ளது.
சோலார் பேனல் ஊழல் வழக்கில் இருந்து உம்மன் சாண்டி விடுவிப்பு
Published on

கேரள மாநிலத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை விற்பனை செய்ய அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி தன்னிடம் இருந்து முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி உள்ளிட்ட ஆறுபேர் 1.35 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் குருவில்லா குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக நடைபெற்ற பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் உம்மன் சாண்டி உள்ளிட்டவர்கள் குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவினங்களுடன் சேர்த்து 1.60 கோடி ரூபாயை 6 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com