தமிழகத்தில் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது- கவிஞர் சினேகன்

தமிழகத்தில் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது என்றும் அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும் என்றும் கவிஞர் சினேகன் பேசியுள்ளார்.
கவிஞர் சினேகன்
கவிஞர் சினேகன்
Published on

ஈரோடு:

ஈரோடு தென் மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மண்டல நகர ஒன்றிய செயலாளர் அறிமுக விழா நடந்தது. விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளரும், கவிஞருமான சினேகன் பேசினார்.

மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நான் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்த போது கண்ட எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. நமது இலக்கு 2021ல் நம்மவரை முதல்வராக்க வேண்டும் என்பது தான். அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது. அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும். எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி என்று யாருமில்லை. எதிரிக்கட்சிகள் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 2021 சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனை முதல்வராக்க கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஈரோடு மக்களின் நீண்ட கால குறைகளை கண்டறிந்து நீக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். வாரம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். கமல்ஹாசனின் தொலைநோக்கு திட்டம் செயல்பாடு குறித்து பிரசாரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com