

இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி கொழும்பில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி நீக்கப்பட்டு ரபாடாவும், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு எய்டன் மார்கிராமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.