ஜென்னிங்ஸின் அபார சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

2-வது இன்னிங்சில் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடிக்க இலங்கைக்கு 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #SLvENG
ஜென்னிங்ஸின் அபார சதத்தால் இலங்கைக்கு 462 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
Published on

பின்னர் 139 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் பேர்ன்ஸ் 23 ரன்னிலும், மொயீன் அலி, ஜோ ரூட் ஆகியோர் தலா 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.

அதன்பின் தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் ஸ்டோக்ஸ் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

ஜென்னிங்ஸ் 146 ரன்னுடனும், சாம் குர்ரான ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா, ஹெராத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com