ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பலி

பண்ருட்டியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பலி
Published on

பண்ருட்டி: 

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை காமராஜ் நகரில் வசித்து வந்தவர் தியாகு(வயது 33). லாரி டிரைவர். இவர் வேலூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் அவர் ஏறினார்.

ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தியாகு, வாசலில் நின்று பயணம் செய்துள்ளார். பண்ருட்டி திருவதிகை என்ற இடத்தில் ரெயில் வந்தபோது, நிலைதடுமாறி ரெயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தியாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பண்ருட்டி போலீசாரும், கடலூர் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com