

சிவகாசி:
சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் நாரணாபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு ரவிச்சந்திரன் (வயது 46) என்பவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.