சிவகங்கையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 11-ந்தேதி நடக்கிறது

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 11-ந்தேதி நடக்கிறது
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்களும் வேலை தேடுபவர்களும் கலந்து கொண்டு - தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் அடிப்படையில் வருகிற 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று சுமார் 100க்கும் மேற்பட்ட பணி நாடுனர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com