சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 61), இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். இதில் ஏரியில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்துபோன முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com