

நெல்லை:
சிங்கை அருகே உள்ள சம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மனைவி பாத்திமா சபீனா (வயது27). அப்துல் ரசாக் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் பாத்திமா சபீனா சத்தம் போட்டுள்ளார். இதனால் அப்துல் ரசாக் வீட்டிற்கு வராமல் அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்று தங்கினார்.
இதைத்தொடர்ந்து நேற்று பாத்திமா சபீனா மாமனார் வீட்டிற்கு சென்று கணவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது மாமனார் நாகூர் மைதீன் அவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார். இது தொடர்பாக பாத்திமா சபீனா சிங்கை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர் மைதீனை கைது செய்தனர்.