புழலில் புதிதாக திறந்த மதுக்கடையில் பெண்கள் முற்றுகை

புழலில் புதிதாக திறந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புழலில் புதிதாக திறந்த மதுக்கடையில் பெண்கள் முற்றுகை
Published on

செங்குன்றம்:

புழல் போலீஸ் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இன்று காலை மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com