குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

சுரண்டை அருகே குடும்பம் நடத்த வர மறுத்த தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
Published on

ஆலங்குளம்:

 சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை மாஞ்சோலை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து கணவரை பிரிந்து ஈஸ்வரி தனது தாய் வீடான பூலாங்குளத்திற்கு வந்துவிட்டார். இந்நிலையில் பாலமுருகன் பூலாங்குளத்தில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலமுருகன், ஈஸ்வரியை அரிவாளால் வெட்டினார். 

இதில் காயமடைந்த அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com