மூடப்பட்ட மதுக்கடைகளை பதனீர் - கள் விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும்: விவசாயிகள் நலச்சங்கம் தீர்மானம்

மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை பதனீர் - கள் விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூடப்பட்ட மதுக்கடைகளை பதனீர் - கள் விற்பனை நிலையமாக மாற்ற வேண்டும்: விவசாயிகள் நலச்சங்கம் தீர்மானம்
Published on

ஈரோடு:

பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. அதன் மத்திய பகுதியில் 15 அடி சேறும் சகதியும் கொண்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 40 அடியாக உள்ளது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அரசும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.

ஆனால் இதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அச்சங்க கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சங்க தலைவர் செ.நல்லசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், வரும் 30-ந்தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பவானிசாகர் நீர் தேக்கத்தில் இருக்கும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு இதனை அறிவித்திருந்தால் ஓரளவு தூர்வாரப்பட்டிருக்கும். ஆகவே இந்த அறிவிப்பால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முன் வர வேண்டும். அதே நேரத்தில் மது அல்லாத கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகளை பதனீர் மற்றும் கள் விற்பனை நிலையங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com