புளோரிடாவில் கடை வீதியில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். #FloridaShotting
புளோரிடாவில் கடை வீதியில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு
Published on

மாஸ்கோ:

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் பிரவுன்ஸ்வில்லே பகுதியில் வீட்டு உபயோகப் பொருள் கடையில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கி விட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.

இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ஆசாமி ஓடிவிட்டான். இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையையும் கவலை அடையச் செய்துள்ளது. #FloridaShotting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com